logo

Number One

பிரைம் லேண்ட்ஸ் முதலாவது இடத்தில் இருப்பதற்கான காரணம்?

ஒவ்வொருவரும் ஒரு பெரிய சொத்து வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். பிரைம் லேண்ட்ஸில் நாங்கள், இந்தக் கனவை நனவாக்குவதை எங்கள் நோக்கமாகக் கொண்டோம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் வீடு கட்ட நிலம் வாங்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பிரைம் லேண்ட்ஸ் நாட்டில் உள்ள மிகச் சிறந்த நில மாற்றுத் தேர்வுகளையும், உங்கள் சொத்துக் கனவுகளை நனவாக்க உதவும் சட்ட மற்றும் நிதி உதவி போன்ற பல்வேறு ஆதரவு சேவைகளையும் வழங்குகிறது. இலங்கையின் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த ரியல் எஸ்டேட் சந்தையில், பிரைம் லேண்ட்ஸ் 300,000 வாடிக்கையாளர்களுக்கு மேல் வாங்கியது, ரியல் எஸ்டேட் துறையில் பிரைம் லேண்ட்ஸின் திறன் மற்றும் தலைமைத்துவத்திற்கான போதுமான ஆதாரம்.

30

வருடகால நம்பிக்கை

18

மாவட்டங்களை உள்ளடக்கியது

300,000+

வாடிக்கையாளர்கள்

line_vector.png

எங்கள் சமீபத்திய பட்டியல்களை ஆராயுங்கள்

வசதியையும் ஸ்டைலையும் வழங்குவதற்காக உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட எங்களின் சமீபத்திய சொத்துப் பட்டியல்களை உலாவவும். விரிவான காட்சிகள் மற்றும் வசதிகளை ஆராய எந்த பட்டியலையும் கிளிக் செய்யவும்

எங்களது திட்டங்களின் தொகுப்பை ஆராய்ந்து பாருங்கள்

தரம் மற்றும் வடிவமைப்பிற்கான எங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் 200-க்கும் மேற்பட்ட நிறைவு செய்யப்பட்ட திட்டங்களை ஆராய்ந்து பாருங்கள். விரிவான தகவல்கள் மற்றும் புகைப்படத் தொகுப்புகளைப் பார்வையிட, அந்தந்த திட்டப் பக்கங்களுக்குச் செல்லவும்.

house_vec.webp

Number

One

பிரைம் லேண்டஸ் மூலம் சிறந்த காணிகளும் வீடுகளும்; இலங்கையின் முன்னணியில் திகழும் ரியல் எஸ்டேட் நிறுவனம்

உங்கள் கனவு இல்லத்தை நிர்மாணிப்பற்கான சிறந்த காணியொன்றை நீங்கள் தேடுகின்றீர்கள் என்றால், அல்லது உங்கள் வாழ்வின் அடுத்த கட்டங்களை ஆரம்பிப்பதற்கு நிர்மாணிக்கப்பட்ட ஒரு வீடு மற்றும் தயார்நிலையில் உள்ள ஒரு வீட்டினை நீங்கள் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கிறீர்கள்

முன்னணியில் திகழும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாக, நாடு முழுவதும் 18 மாவட்டங்களில் பரந்தளவிலான மிகச்சிறந்த காணிகள் எம்மிடம் உள்ளன. அத்துடன் உங்கள் தெரிவுக்காக பல்வேறு விலை வரம்புகள், அளவுகள் மற்றும் வடிவமைப்புகளில் வடிவமைக்கப்பட்ட வீடுகள் எம்மிடம் உள

விருதுகள்

ரியல் எஸ்டேட் (சொத்து விற்பனை) துறைக்கு நாங்கள் வழங்கிய அசாத்திய பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில், உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து மதிப்புமிக்க விருதுகளைப் பிரைம் குரூப் (Prime Group) பெற்றுள்ள பெருமிதமடைகிறது.

பிரைம் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள்

260627090624photo-collage.png__3_.png

Prime Lands களுத்துறையின் முதலாவது பாதுகாப்பு வசதியுடன் கூடிய (Gated) வதிவிடக் குடியிருப்பான Kaloora இன் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்துள்ளது

களுத்துறையின் முதலாவது பாதுகாப்பு வசதியுடன் கூடிய (Gated) வதிவிடக் குடியிருப்பு மாதிரியான Kaloora வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டலை Prime Lands உத்தியோகபூர்வமாக நிறைவேற்றியுள்ளது. இது அந்நகரத்தின் நவீன வாழ்க்கை முறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளக் கட்டுமானத்தின் ஆரம்பத்தைக் குறிக்கின்றது. இந்நிகழ்வு, இலங்கையில் அதிவேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மையங்களில் ஒன்றாக களுத்துறை உருவெடுத்து வருவதை வெளிப்படுத்தியுள்ளது.Kaloora வீடமைப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை Prime Group இன் கட்டுமானப் பிரிவான Prime Constructions Pvt Ltd பொறுப்பேற்று முன்னெடுத்து வருகின்றது. இது இக்கட்டுமானப் பணியின் ஒவ்வொரு கட்டத்திற்கும் மிகச்சிறந்த பொறியியல் மற்றும் திட்ட-வழங்கல் நிபுணத்துவத்தை கொண்டு சேர்க்கின்றது. தற்போது கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்திட்டமானது அதன் எதிர்கால வதிவாளர்களுக்காக, தனது சிறந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் உத்தியோகபூர்வப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.களுத்துறை நகரிலிருந்து ஐந்து நிமிடத் தொலைவிலும், நாகொடை வைத்தியசாலையிலிருந்து 800 மீற்றர் தூரத்திலும், தொடாங்கொட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலிலிருந்து 15 நிமிடத் தொலைவிலும் அமைந்துள்ள Kaloora, பாடசாலைகள், சுப்பர் மார்க்கெட்டுகள், வங்கிகள், உணவகங்கள் மற்றும் அன்றாட அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் மிக இலகுவாக அணுகக்கூடிய தூரத்தில் அமையப்பெற்றுள்ளது. இக்குடியிருப்பு வளாகத்தினுள், 24 மணிநேரப் பாதுகாப்பு, நீச்சல் தடாகம், முழுமையாக உபகரணங்கள் பொருத்தப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், சிறுவர் விளையாட்டிடம், உள்ளரங்க கிரிக்கெட் வசதி மற்றும் பல்நோக்கு மண்டபம் ஆகியவற்றுடன் அன்றாட வாழ்க்கை முறை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது; இது கொழும்பு நகரின் அதிநவீன சொகுசு வாழ்க்கை முறையின் வசதிகளையும் கம்பீரத்தையும் மாறாமல் களுத்துறையில் வழங்குகின்றது.பாதுகாப்பு, சௌகரியம் மற்றும் நீண்டகால மதிப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் குடும்பங்களுக்காக பிரத்தியேகமாகத் திட்டமிடப்பட்டுள்ள Kaloora, விசாலமான வீடுகள், சமகாலக் கட்டிடக்கலை மற்றும் சிந்தனைப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கை முறை வசதிகள் ஆகியவற்றை ஒரு பாதுகாப்பான, அமைதியான சூழலில் மிக நேர்த்தியாக ஒருங்கிணைக்கின்றது.Kaloora, பாதுகாப்பான அமைதியான சூழலுடன் மிக நேர்த்தியாக ஒன்றிணைகின்றது. அத்துடன், சமூக வாழ்வு அன்றாட சௌகரியங்களுடன் சீராக இணங்கிச் செல்கின்றது

மேலும் வாசிக்க
260619180653Prime-Marina-3-Plotst-KV2.jpg.avif

போர்ட் சிட்டியின் (Port City) மிகப்பெரிய ரியல் எஸ்டேட் முதலீட்டாளராக உருவெடுத்து, பிரைம் & மெல்வா மெரினா பகுதியில் மூன்றாவது காணித் துண்டை தன்வசப்படுத்தின

இலங்கையின் எதிர்காலம் மீதான இணையற்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், பிரைம் (Prime) மற்றும் மெல்வா (Melwa) நிறுவனங்கள் போர்ட் சிட்டி கொழும்பின் (Port City Colombo) மெரினா பகுதியில் (Marina Area) தங்களது மூன்றாவது மற்றும் அதிக தேவையுள்ள காணித் துண்டுகளில் ஒன்றை வாங்கியதன் மூலம், போர்ட் சிட்டியின் மிகப்பெரிய சொத்து முதலீட்டாளர் என்ற தங்களது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளன. காணி இலக்கம் 1-02-03 இன் கீழ் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சமீபத்திய கொள்வனவானது, அவர்களின் மொத்த காணி உரிமையை சுமார் 16 ஏக்கராக உயர்த்தியுள்ளதுடன், போர்ட் சிட்டிக்குள் அவர்களை மிகப்பெரிய ரியல் எஸ்டேட் முதலீட்டாளராக மாற்றியுள்ளது.புதிதாக வாங்கப்பட்ட இந்த காணித் துண்டானது சொகுசு குடியிருப்புகள், வணிக இடங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை உள்ளடக்கிய ஒரு தனித்துவமான கலப்பு மேம்பாட்டுத் திட்டமாக (mixed-use development) அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. 150 மீற்றர் உயரம் மற்றும் 42 மாடிகளைக் கொண்ட கட்டிடங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ள இத்திட்டம், மெரினா பகுதியில் அமையவிருக்கும் மிக முக்கியமான எதிர்கால அபிவிருத்திகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.இந்தக் கொள்முதல் குறித்து பிரைம் குழுமத்தின் (Prime Group) தலைவர் பிரேமலால் பிராமணகே கருத்துத் தெரிவிக்கையில்:"Prime Marina திட்டத்தின் மகத்தான வெற்றி, போர்ட் சிட்டி கொழும்பில் எங்களது முதலீட்டை மேலும் வலுப்படுத்துவதற்கான நம்பிக்கையை எங்களுக்கு அளித்துள்ளது. போர்ட் சிட்டியின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் முதலீட்டாளராக மாறுவது ஒரு முக்கிய மைல்கல்லாகும், இது இலங்கையின் எதிர்காலம் மீதான எங்களது நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. நாட்டின் உண்மையான திறனை வெளிப்படுத்தும் தனித்துவமான திட்டங்கள் மூலம் இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை உலகிற்கு கொண்டு செல்வதே எங்களது நோக்கமாகும்."போர்ட் சிட்டி கொழும்பில் இப்போது மூன்று மூலோபாய கொள்முதல்களை உறுதி செய்துள்ளதன் மூலம், பிரைம் மற்றும் மெல்வா நிறுவனங்கள் இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையின் மாற்றத்திற்கு தொடர்ந்து தலைமை தாங்குவதுடன், உலகளாவிய சொத்து முதலீட்டிற்கான முதன்மை இடமாக இலங்கையை நிலைநிறுத்த உதவுகின்றன.உள்நாட்டு மற்றும் சர்வதேச நுகர்வோரின் முன்னோடியில்லாத நம்பிக்கையை வெளிப்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த அறிமுகம் மற்றும் சாதனை அளவிலான விற்பனையால் வகைப்படுத்தப்பட்ட 'Prime Marina' இன் அசாதாரண வெற்றியைத் தொடர்ந்து, பிரைம் மற்றும் மெல்வா நிறுவனங்கள் போர்ட் சிட்டி கொழும்பின் பிரத்தியேகமான கடற்கரை பகுதியில் மற்றுமொரு மூலோபாய காணித் துண்டை வாங்கியதன் மூலம் தங்களது வணிக எல்லையை வேகமாக விரிவுபடுத்தியுள்ளன. இந்த தீர்க்கமான நடவடிக்கை ஒரு தைரியமான தொலைநோக்கு பார்வையை உறுதிப்படுத்துகிறது: அதாவது, இந்த தீவில் புதிய மெரினா வாழ்க்கை முறை (marina living) உருவாகும் வேளையில், துபாய், சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் போன்ற உலகளாவிய நாடுகளுக்கு இணையாக இலங்கையை நிலைநிறுத்துவதாகும்.

மேலும் வாசிக்க

Prime Melwa ஆசியாவின் உலகளாவிய Marina-Front கட்டிடக்கலை மாஸ்டர் பீஸை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது

மேலும் வாசிக்க - Prime Melwa Formally Commences Asia’s Global Marina-Front Architectural Masterpiece

கொழும்பு போர்ட் சிட்டியில் உலகத்தரம் வாய்ந்த மரினா வாழ்க்கை முறையை பிரைம் மெல்வா அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துகிறது

மேலும் வாசிக்க - Prime Melwa Unveils World Class Marina Living at Port City, Colombo

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.