logo

பிரைம் லேண்ட்ஸ் பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகள்

ப்ரைம் லேண்ட்ஸின் சமீபத்திய மேம்பாடுகள் மற்றும் சாதனைகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள். எங்கள் திட்டங்கள் மற்றும் மைல்கற்கள் பற்றி மேலும் அறிய எங்கள் செய்திக் கட்டுரைகளைப் படிக்கவும்.

2025-05-15

பிரைம் குரூப் (Prime Group) சர்வதேச இசை நட்சத்திரமான உமாரியா சின்ஹவங்சவை தனது உலகளாவிய பிராண்ட் தூதராக நியமித்துள்ளது

30 ஆண்டுகால அத்தியாவசிய பாரம்பரியத்தைக் கொண்ட, இலங்கையின் மிகவும் நம்பகமான அசையாச் சொத்துச் சන්නாமமும், அவுஸ்திரேலியா மற்றும் துபாயில் தனது கிளைகளை நிறுவி சர்வதேச அளவில் தடம் பதித்த முதலாவது இலங்கை அசையாச் சொத்து நிறுவனமுமான பிரைம் குரூப் (Prime Group), இலங்கையின் கலைத்துறையை சர்வதேச பார்வையாளர்களுடன் இணைத்த புகழ்பெற்ற இசை நட்சத்திரமும், பின்னணி பாடகியுமான உமாரியா சின்ஹவங்சவை (Umaria Sinhawansa) தனது உலகளாவிய பிராண்ட் தூதராக (Global Brand Ambassador) நியமித்துள்ளது.இந்த கூட்டாண்மை 100% இலங்கைக்குரிய பெருமைமிக்க இரு அடையாளங்களான பிரைம் குரூப் மற்றும் உமாரியாவை ஒன்றிணைக்கிறது. இவர்கள் இருவரும் இலங்கைத் திறமைகளையும் சிறப்புகளையும் உலக அரங்கில் வெளிப்படுத்தும் ஒற்றைத் தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த முன்னோடி இணைப்பானது, அண்மையில் பிரைம் குரூப்பின் தலைமையகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டதன் மூலம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.உமாரியாவின் உலகளாவிய செல்வாக்கைப் பயன்படுத்தி, பிராந்திய மற்றும் சர்வதேச சந்தைகளில் தனது இருப்பை விரிவுபடுத்துவதற்கான பிரைம் குரூப்பின் மூலோபாய முயற்சிக்கு இக் கூட்டாண்மை பெரும் உந்துசக்தியாக அமைகிறது. உள்ளூர் சிறப்புகளை வலுவூட்டும் பிரைம் குரூப்பின் தத்துவத்தை முன்னிலைப்படுத்தி, இலங்கையின் திறமைகளையும் கலாச்சாரத்தையும் கொண்டாடுவதும் இக் கூட்டணியின் நோக்கமாகும். உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்த ஒரு இசை நட்சத்திரம் மற்றும் பாடகி என்ற வகையில், உமாரியாவின் படைப்பாற்றல் மற்றும் ஆதரவின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அணுகலையும் தாக்கத்தையும் வழங்க பிரைம் குரூப் இலக்கு வைத்துள்ளது.இது குறித்து பிரைம் குரூப் இணைத் தலைவி சந்தாமினி பெரேரா கூறுகையில், "உமாரியா எமது பாரம்பரியத்தில் வேரூன்றி, உலகளவில் ஒளிரும் இலங்கை சிறப்பின் அடையாளமாகத் திகழ்கிறார். உலகத்தரம் வாய்ந்த அசையாச் சொத்து கண்டுபிடிப்புகளின் மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதற்கான பிரைம் குரூப்பின் நோக்கத்துடன் அவரது நியமனம் மிக கச்சிதமாகப் பொருந்துகிறது. ஒன்றிணைந்து, எமது நாட்டின் திறமையையும் கலாச்சார செழுமையையும் கொண்டாடும் ஒரு கதையின் மூலம், தொழில்துறை தரங்களை நாங்கள் மறுவரையறை செய்வோம், நம்பிக்கையை ஏற்படுத்துவோம் மற்றும் சர்வதேச சந்தைகளுடன் இணைவோம்." என்றார்.இந்த கூட்டாண்மை குறித்து தனது பெருமிதத்தை வெளிப்படுத்திய உமாரியா சின்ஹவங்ச, "30 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட, உள்ளூரில் ஆழமாக வேரூன்றிய பிராண்டான பிரைம் குரூப் உடன் இணைவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இலங்கையை உலகிற்கு கொண்டு செல்வதற்கும், நாட்டிலுள்ள திறமைகளை கொண்டாடுவதற்கும், உலக அரங்கில் முத்திரை பதிப்பதற்கும் நாம் கொண்டுள்ள பரஸ்பர பார்வையை எமது கூட்டாண்மை பிரதிபலிக்கிறது. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு பிரைம் நிறுவனத்திடமிருந்து எனது முதலாவது சொத்தை நான் வாங்கியிருந்தேன் - இது எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். தற்போது பிரைம் குரூப்பின் உலகளாவிய பிராண்ட் தூதராக பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமளவில் பெருமிதம் கொள்கிறேன். மேலும் எங்களது சிறப்பான பயணத்தை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்றார்.பிரைம் குரூப், உமாரியா சின்ஹவங்சவுடன் இணைந்து, உலகெங்கிலும் சிறப்பான தன்மையை மறுவரையறை செய்வதற்காக, இலங்கையின் பாரம்பரியத்தையும் உலகளாவிய லட்சியத்தையும் இணைக்கும் இந்த கூட்டுமுயற்சியைக் கொண்டாட இலக்கு வைத்துள்ளது.

மேலும் வாசிக்க
‘C'est La Vie’- That’s Life by Prime Group – பிரான்ஸ் நாட்டின் கலை அம்சங்களுடனான நவீன இல்லத் தெரிவுகள்

2025-02-15

‘C'est La Vie’- That’s Life by Prime Group – பிரான்ஸ் நாட்டின் கலை அம்சங்களுடனான நவீன இல்லத் தெரிவுகள்

நவீன சொகுசு இல்லத் தொகுதியான C'est La Vie – That’s Life – by Prime Group நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. கனவு வாழ்க்கைமுறையை நிஜமானதாக மாற்றியமைக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.வனகுரு மாவத்தையிலுள்ள பசுமையான பகுதியில் இந்தக் குடியிருப்பு தொகுதி அமைந்துள்ளதுடன், 90 பிரத்தியேகமான இல்லங்களை கொண்டதாக இந்தத் தொகுதி காணப்படுகின்றது. ஒவ்வொரு இல்லமும் ஆங்கில-ரோமன் கட்டடக் கலை அம்சங்களை பின்பற்றி, கண்கவர் பிரான்ஸ் வெளியக வடிவமைப்புகளையும் கொண்டுள்ளது. 17 அடி சீலிங்களை கொண்டதுடன், போதியளவு வசிப்பிட பகுதிகளுடன், ஏழு பிரத்தியேகமான விலா வடிவமைப்புகளையும் கொண்டுள்ளதுடன், ஒவ்வொன்றும் 1,159 முதல் 2,164 சதுர அடி வரை காணப்படுவதுடன், ஒப்பற்ற சௌகரியமான பரந்த விருப்பத் தெரிவுகளை நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ளன.6.5 ஏக்கர் இரம்மியமான சூழலில் அமைந்துள்ள C’est La Vie என்பது பசுமையான சூழலில், நீர் நிலை உள்ளம்சங்களை முகப்பாக கொண்டும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும் அமைந்துள்ளது. சொகுசான முறையில் அமைதியான சூழலை வசிப்பதற்கு எதிர்பார்ப்பவர்களின் சிறந்த தெரிவாக இது அமைந்திருக்கும்.அத்துருகிரிய, பத்தரமுல்ல, கொட்டாவ, தலவத்துகொட மற்றும் மாலபே ஆகிய நகரங்களுக்கு இலகுவாக பயணிக்கக்கூடிய தூரத்தில் அமைந்துள்ளதுடன், அதிவேக நெடுஞ்சாலையுடன் சில நிமிடங்களில் தொடர்பை ஏற்படுத்தும் தூரத்திலும், முன்னணி பாடசாலைகள், வைத்தியசாலைகள், சொப்பிங் நிலையங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் போன்றவற்றை துரிதமாக அடையக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது.C'est La Vie இல், ஒவ்வொரு உள்ளம்சமும் நுணுக்கமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரவேசிக்கும் பகுதி முதல், வசிப்போர் சொகுசான Club Lounge ஊடாக வரவேற்கப்படுவர். நவீன அம்சங்கள் ஐரோப்பிய கட்டமைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. உடன் தயாரிக்கப்பட்ட கோப்பி உடன் குரொசெயின்ட்கள் அருந்தும் அனுபவத்தை பெறலாம், rooftop BBQ terrace இல் ஒன்றுகூடல்களை முன்னெடுக்க முடிவதுடன், வியாபார சந்திப்புகளை சுலபமாக மேற்கொள்ள முடியும்.சொகுசான அம்சங்களுக்கு அப்பாற்பட்டதாக தினசரி விருந்தளிப்பதாக இப்பகுதியில் வாழ்க்கை அமைந்துள்ளது. பரந்த நீச்சல் தடாகத்தை கொண்டிருப்பதுடன், நீர்வீழ்ச்சி போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. உடற்தகைமையை பேணுவதற்காக டெனிஸ் கோர்ட் காணப்படுவதுடன், நவீன வசதிகள் படைத்த ஜிம் ஒன்றும் அமைந்துள்ளது. சிறுவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக Twilight Play Zone அமைந்துள்ளது. C’est La Vie என்பது ஒரு இல்லமாக மாத்திரம் அமைந்திராமல், 100%*க்கு அதிகமான முதலீட்டின் மீது வருமதியை வழங்குவதுடன், நெகிழ்ச்சியான 1% வட்டியில்லாத மாதாந்த தவணைக் கொடுப்பனவு திட்டத்தையும் வழங்குகின்றது. உறுதியான முதலீட்டை மேற்கொள்வதனூடாக, உங்களின் வாழ்க்கைமுறையை மேம்படுத்திக் கொள்வதற்கான உங்களுக்கான வாய்ப்பாக இது அமைந்துள்ளது. (*நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இது அமைந்திருக்கும்).Prime Group இன் இணை தலைமை அதிகாரியான சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “C'est la Vie என்பது ஒப்பற்ற சொகுசு வாழிட அனுபவத்தை வழங்கும் எமது அர்ப்பணிப்பை உறுதி செய்வதுடன், பிரத்தியேகமான வாழ்க்கைமுறை மற்றும் உறுதியான முதலீட்டு வாய்ப்பை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு உறுதியான முதலீட்டு வருமதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது. C'est la Vie உடன் Prime Group தொடர்ச்சியாக நவீன வாழ்க்கைமுறைகளை மேம்படுத்தி புதிய தொழிற்துறை நியமங்களை நிறுவும் ஒப்பற்ற கொள்கைகளை ஈடுபாட்டுடன் தொடர்கின்றது. தினசரி வசிப்பிட அனுபவத்தை மாற்றியமைக்கும் வகையிலான நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்ட பகுதிகளை கொண்டதாக இந்தத் திட்டம் அமைந்திருக்கும் என்பதுடன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் Prime Group கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் சிறந்த பெறுமதிகளை வழங்குவதாகவும் அமைந்திருக்கும்.” என்றார்.ஒவ்வொரு தருணமும் மனம்மறவாத வகையில் அமைந்திருக்கும். பிரத்தியேகமான வாழ்க்கைமுறைக்கான விலாவை இன்றே தெரிவு செய்திடுங்கள்.‘C'est La Vie’ Premium Residences by Prime Group – Elite க்கு புதிய முகவரி அமைந்துள்ளது.இந்தப் பெருமைக்குரிய சமூகத்தில் உங்களின் சொந்த இடத்தை உரிமையாக்கிக் கொள்வதற்கு 0701 088 088 எண்ற எண்ணை அழைக்கவும் அல்லது https://www.primelands.lk/ எனும் இணையதளத்தை பார்வையிடவும்.  

மேலும் வாசிக்க
வேர்ள்ட் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் 2024 இல் இரண்டு விருதுகளை Prime Lands சுவீகரித்தது

2024-11-08

வேர்ள்ட் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் 2024 இல் இரண்டு விருதுகளை Prime Lands சுவீகரித்தது

இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி செயற்பாட்டாளராகத் திகழும் Prime Lands (Pvt) Ltd, தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற வேர்ள்ட் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் 2024 இல் இரண்டு விருதுகளை சுவீகரித்துள்ளது. இலங்கையில் ஆண்டின் சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் 2024 மற்றும் நிறுவனத்தின் புதிய நிர்மாணத் திட்டமான YOLO க்காக, இலங்கையின் ஆண்டின் சிறந்த ரியல் எஸ்டேட் செயற்திட்டம் 2024 ஆகிய விருதுகளை Prime Lands (Pvt) Ltd நிறுவனம் சுவீகரித்துள்ளது. இந்த விருதுகளினூடாக, புத்தாக்கம், சிறப்புக்கான ஈடுபாடு மற்றும் உலகத் தரம் வாய்ந்த நியமங்களை பேணுதல் போன்றவற்றினூடாக ரியல் எஸ்டேட் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி வரும் Prime Lands’ இன் அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளது.Prime Lands இன் ஸ்தாபகரும் குழும தவிசாளருமான பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடி எனும் வகையில், பாரம்பரிய வரையறைகளுக்கு அப்பாலான வசிப்பிட அனுபவங்களை ஏற்படுத்துவதில் Prime Lands எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தது. செங்கற்கள் மற்றும் சாந்துக் கலவையைக் கொண்டு கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு என்பதற்கு அப்பால் சென்று, கனவுகளுக்கான அடித்தளங்களை ஏற்படுத்தல், எதிர்பார்ப்புகளின் அரண்களை கட்டியெழுப்பல் மற்றும் எமது பிரத்தியேகமான வாடிக்கையாளர்களுக்கு வரையறைகளில்லாத வாய்ப்புகளுடனான கூரைகளை உருவாக்கல் போன்றவற்றில் எமது மூலோபாய தீர்மானம் தங்கியுள்ளது. தொழிற்துறையில் எம்மை அசல் நியமங்களை ஏற்படுத்துவோராக எம்மை நிலைநிறுத்துவதில் இந்த நோக்கு கைகொடுத்துள்ளதுடன், இலங்கையின் ரியல் எஸ்டேட் கட்டமைப்பை மாற்றியமைப்பதுடன், ஒப்பற்ற பெறுமதியை தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொடுப்பதில் பங்களிப்பு வழங்குகின்றது.” என்றார். மூன்று தசாப்தகாலமாக, நம்பிக்கையை வென்ற நிர்மாண வடிவமைப்பாளராக Prime Lands தொழிற்துறையில் முன்னிலையில் திகழ்வதுடன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சுதல் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் போன்றவற்றை தொடர்ந்தும் நிறைவேற்றுவதற்காக புகழ்பெற்றுள்ளது. நீடித்து நிலைத்திருக்கும் மரபுவழியை உருவாக்குவதுடன், சொகுசு. அதிசொகுசு. ஓய்வு மற்றும் வாழ்க்கைமுறை வசிப்பிடங்களை, தனது புரட்சிகரமான செயற்திட்டங்களினூடாக Prime Lands மாற்றியமைத்துள்ளது. இலங்கையில் நவீன இல்லத் தொடர்மனை நகரங்களை நிறுவும் நிலைக்கு நிறுவனம் வளர்ச்சியடைந்துள்ளதுடன், எதிர்கால தலைமுறைகளுக்கு வசிக்கக்கூடிய, அரவணைப்பான அயலவர் சூழலை உருவாக்கிய வண்ணமுள்ளது. மேலும், அலங்கார வடிவமைப்பு மற்றும் பலதுறைசார் நிபுணத்துவம் போன்றவற்றில்<span xss="remo

மேலும் வாசிக்க

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.