2025-05-15
பிரைம் குரூப் (Prime Group) சர்வதேச இசை நட்சத்திரமான உமாரியா சின்ஹவங்சவை தனது உலகளாவிய பிராண்ட் தூதராக நியமித்துள்ளது
30 ஆண்டுகால அத்தியாவசிய பாரம்பரியத்தைக் கொண்ட, இலங்கையின் மிகவும் நம்பகமான அசையாச் சொத்துச் சන්නாமமும், அவுஸ்திரேலியா மற்றும் துபாயில் தனது கிளைகளை நிறுவி சர்வதேச அளவில் தடம் பதித்த முதலாவது இலங்கை அசையாச் சொத்து நிறுவனமுமான பிரைம் குரூப் (Prime Group), இலங்கையின் கலைத்துறையை சர்வதேச பார்வையாளர்களுடன் இணைத்த புகழ்பெற்ற இசை நட்சத்திரமும், பின்னணி பாடகியுமான உமாரியா சின்ஹவங்சவை (Umaria Sinhawansa) தனது உலகளாவிய பிராண்ட் தூதராக (Global Brand Ambassador) நியமித்துள்ளது.இந்த கூட்டாண்மை 100% இலங்கைக்குரிய பெருமைமிக்க இரு அடையாளங்களான பிரைம் குரூப் மற்றும் உமாரியாவை ஒன்றிணைக்கிறது. இவர்கள் இருவரும் இலங்கைத் திறமைகளையும் சிறப்புகளையும் உலக அரங்கில் வெளிப்படுத்தும் ஒற்றைத் தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த முன்னோடி இணைப்பானது, அண்மையில் பிரைம் குரூப்பின் தலைமையகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டதன் மூலம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.உமாரியாவின் உலகளாவிய செல்வாக்கைப் பயன்படுத்தி, பிராந்திய மற்றும் சர்வதேச சந்தைகளில் தனது இருப்பை விரிவுபடுத்துவதற்கான பிரைம் குரூப்பின் மூலோபாய முயற்சிக்கு இக் கூட்டாண்மை பெரும் உந்துசக்தியாக அமைகிறது. உள்ளூர் சிறப்புகளை வலுவூட்டும் பிரைம் குரூப்பின் தத்துவத்தை முன்னிலைப்படுத்தி, இலங்கையின் திறமைகளையும் கலாச்சாரத்தையும் கொண்டாடுவதும் இக் கூட்டணியின் நோக்கமாகும். உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்த ஒரு இசை நட்சத்திரம் மற்றும் பாடகி என்ற வகையில், உமாரியாவின் படைப்பாற்றல் மற்றும் ஆதரவின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அணுகலையும் தாக்கத்தையும் வழங்க பிரைம் குரூப் இலக்கு வைத்துள்ளது.இது குறித்து பிரைம் குரூப் இணைத் தலைவி சந்தாமினி பெரேரா கூறுகையில், "உமாரியா எமது பாரம்பரியத்தில் வேரூன்றி, உலகளவில் ஒளிரும் இலங்கை சிறப்பின் அடையாளமாகத் திகழ்கிறார். உலகத்தரம் வாய்ந்த அசையாச் சொத்து கண்டுபிடிப்புகளின் மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதற்கான பிரைம் குரூப்பின் நோக்கத்துடன் அவரது நியமனம் மிக கச்சிதமாகப் பொருந்துகிறது. ஒன்றிணைந்து, எமது நாட்டின் திறமையையும் கலாச்சார செழுமையையும் கொண்டாடும் ஒரு கதையின் மூலம், தொழில்துறை தரங்களை நாங்கள் மறுவரையறை செய்வோம், நம்பிக்கையை ஏற்படுத்துவோம் மற்றும் சர்வதேச சந்தைகளுடன் இணைவோம்." என்றார்.இந்த கூட்டாண்மை குறித்து தனது பெருமிதத்தை வெளிப்படுத்திய உமாரியா சின்ஹவங்ச, "30 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட, உள்ளூரில் ஆழமாக வேரூன்றிய பிராண்டான பிரைம் குரூப் உடன் இணைவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இலங்கையை உலகிற்கு கொண்டு செல்வதற்கும், நாட்டிலுள்ள திறமைகளை கொண்டாடுவதற்கும், உலக அரங்கில் முத்திரை பதிப்பதற்கும் நாம் கொண்டுள்ள பரஸ்பர பார்வையை எமது கூட்டாண்மை பிரதிபலிக்கிறது. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு பிரைம் நிறுவனத்திடமிருந்து எனது முதலாவது சொத்தை நான் வாங்கியிருந்தேன் - இது எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். தற்போது பிரைம் குரூப்பின் உலகளாவிய பிராண்ட் தூதராக பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமளவில் பெருமிதம் கொள்கிறேன். மேலும் எங்களது சிறப்பான பயணத்தை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்றார்.பிரைம் குரூப், உமாரியா சின்ஹவங்சவுடன் இணைந்து, உலகெங்கிலும் சிறப்பான தன்மையை மறுவரையறை செய்வதற்காக, இலங்கையின் பாரம்பரியத்தையும் உலகளாவிய லட்சியத்தையும் இணைக்கும் இந்த கூட்டுமுயற்சியைக் கொண்டாட இலக்கு வைத்துள்ளது.
மேலும் வாசிக்க