logo

2026-06-19

போர்ட் சிட்டியின் (Port City) மிகப்பெரிய ரியல் எஸ்டேட் முதலீட்டாளராக உருவெடுத்து, பிரைம் & மெல்வா மெரினா பகுதியில் மூன்றாவது காணித் துண்டை தன்வசப்படுத்தின

இலங்கையின் எதிர்காலம் மீதான இணையற்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், பிரைம் (Prime) மற்றும் மெல்வா (Melwa) நிறுவனங்கள் போர்ட் சிட்டி கொழும்பின் (Port City Colombo) மெரினா பகுதியில் (Marina Area) தங்களது மூன்றாவது மற்றும் அதிக தேவையுள்ள காணித் துண்டுகளில் ஒன்றை வாங்கியதன் மூலம், போர்ட் சிட்டியின் மிகப்பெரிய சொத்து முதலீட்டாளர் என்ற தங்களது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளன. காணி இலக்கம் 1-02-03 இன் கீழ் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சமீபத்திய கொள்வனவானது, அவர்களின் மொத்த காணி உரிமையை சுமார் 16 ஏக்கராக உயர்த்தியுள்ளதுடன், போர்ட் சிட்டிக்குள் அவர்களை மிகப்பெரிய ரியல் எஸ்டேட் முதலீட்டாளராக மாற்றியுள்ளது.

புதிதாக வாங்கப்பட்ட இந்த காணித் துண்டானது சொகுசு குடியிருப்புகள், வணிக இடங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை உள்ளடக்கிய ஒரு தனித்துவமான கலப்பு மேம்பாட்டுத் திட்டமாக (mixed-use development) அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. 150 மீற்றர் உயரம் மற்றும் 42 மாடிகளைக் கொண்ட கட்டிடங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ள இத்திட்டம், மெரினா பகுதியில் அமையவிருக்கும் மிக முக்கியமான எதிர்கால அபிவிருத்திகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தக் கொள்முதல் குறித்து பிரைம் குழுமத்தின் (Prime Group) தலைவர் பிரேமலால் பிராமணகே கருத்துத் தெரிவிக்கையில்:

"Prime Marina திட்டத்தின் மகத்தான வெற்றி, போர்ட் சிட்டி கொழும்பில் எங்களது முதலீட்டை மேலும் வலுப்படுத்துவதற்கான நம்பிக்கையை எங்களுக்கு அளித்துள்ளது. போர்ட் சிட்டியின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் முதலீட்டாளராக மாறுவது ஒரு முக்கிய மைல்கல்லாகும், இது இலங்கையின் எதிர்காலம் மீதான எங்களது நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. நாட்டின் உண்மையான திறனை வெளிப்படுத்தும் தனித்துவமான திட்டங்கள் மூலம் இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை உலகிற்கு கொண்டு செல்வதே எங்களது நோக்கமாகும்."

போர்ட் சிட்டி கொழும்பில் இப்போது மூன்று மூலோபாய கொள்முதல்களை உறுதி செய்துள்ளதன் மூலம், பிரைம் மற்றும் மெல்வா நிறுவனங்கள் இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையின் மாற்றத்திற்கு தொடர்ந்து தலைமை தாங்குவதுடன், உலகளாவிய சொத்து முதலீட்டிற்கான முதன்மை இடமாக இலங்கையை நிலைநிறுத்த உதவுகின்றன.

உள்நாட்டு மற்றும் சர்வதேச நுகர்வோரின் முன்னோடியில்லாத நம்பிக்கையை வெளிப்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த அறிமுகம் மற்றும் சாதனை அளவிலான விற்பனையால் வகைப்படுத்தப்பட்ட 'Prime Marina' இன் அசாதாரண வெற்றியைத் தொடர்ந்து, பிரைம் மற்றும் மெல்வா நிறுவனங்கள் போர்ட் சிட்டி கொழும்பின் பிரத்தியேகமான கடற்கரை பகுதியில் மற்றுமொரு மூலோபாய காணித் துண்டை வாங்கியதன் மூலம் தங்களது வணிக எல்லையை வேகமாக விரிவுபடுத்தியுள்ளன. இந்த தீர்க்கமான நடவடிக்கை ஒரு தைரியமான தொலைநோக்கு பார்வையை உறுதிப்படுத்துகிறது: அதாவது, இந்த தீவில் புதிய மெரினா வாழ்க்கை முறை (marina living) உருவாகும் வேளையில், துபாய், சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் போன்ற உலகளாவிய நாடுகளுக்கு இணையாக இலங்கையை நிலைநிறுத்துவதாகும்.

Related News

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.